செய்திகள்
கைது

வாணியம்பாடியில் ரேசன் அரிசி கடத்திய 2 பேர் கைது

Published On 2021-09-09 10:52 GMT   |   Update On 2021-09-09 10:52 GMT
திருப்பத்தூர் மாவட்டத்தில் இருந்து தொடர்ந்து ரேசன் அரிசி கடத்துவோரை கண்காணிக்க வாணியம்பாடி அடுத்த ரெட்டியூர் பகுதியில் போலீசார் மற்றும் உணவு கடத்தல் தடுப்பு பிரிவினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
வாணியம்பாடி:

திருப்பத்தூர் மாவட்டத்தில் இருந்து தொடர்ந்து ரேசன் அரிசி கடத்துவோரை கண்காணிக்க வாணியம்பாடி அடுத்த ரெட்டியூர் பகுதியில் போலீசார் மற்றும் உணவு கடத்தல் தடுப்பு பிரிவினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, வந்த அந்த வழியாக வந்த வேனை நிறுத்தி சோதனை செய்தனர்.

அதில் 4 டன் ரே‌ஷன் அரிசியை கடத்தி கொண்டு சென்றது தெரியவந்தது.

பின்னர் ஒசூரை சேர்ந்த வேன் டிரைவர் சிவா மற்றும் பெருமாள் (வயது 39) ஆகியோரை உணவு கடத்தல் பிரிவு போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
Tags:    

Similar News