ஆன்மிகம்
கோர்க்காடு எல்லையம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்
வில்லியனூர் அருகே உள்ள கோர்க்காடு எல்லையம்மன் கோவிலில் அலங்கரிக்கப்பட்ட ஊஞ்சலில் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
வில்லியனூர் அருகே உள்ள கோர்க்காடு எல்லையம்மன் கோவிலில் செடல் திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவில் 11-ம் நாள் நிகழ்ச்சியாக ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது.
அலங்கரிக்கப்பட்ட ஊஞ்சலில் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் அமாவாசை பக்தர்கள் குழுவினர் செய்திருந்தனர்.
அலங்கரிக்கப்பட்ட ஊஞ்சலில் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் அமாவாசை பக்தர்கள் குழுவினர் செய்திருந்தனர்.