செய்திகள்
கைது

மதுக்கூர் அருகே செல்போன் திருட முயன்ற வாலிபர் கைது

Published On 2021-11-20 10:38 GMT   |   Update On 2021-11-20 10:38 GMT
மதுக்கூர் அருகே செல்போன் திருட முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுக்கூர்:

அதிராம்பட்டினம் பிலால் நகரை சேர்ந்தவர் முகமது ஹாரிஸ் (வயது 21). இவர் வாட்டாகுடி ரோட்டில் உள்ள இந்திரா நகர் பகுதியில் ஆடு வளர்க்கும் இடத்தில் வேலை பார்த்து வருகிறார்.

சம்பவத்தன்று மதுக்கூர் சிவக்கொல்லை இந்திரா நகர் 2-வது தெருவை முகமதுரபீக் ராவுத்தர் என்பவர் அங்கு வந்து தூங்கி கொண்டிருந்த முகமது ஹாரிஸ் செல்போனை திருட முயற்சி செய்தபோது அவரை பிடித்து மதுக்கூர் போலீசில் ஒப்படைத்தனர்.

முகமது ஹாரிஸ் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து முகமதுரபீக் ராவுத்தரை கைது செய்தனர்.

Tags:    

Similar News