செய்திகள்
கொரோனா வைரஸ்

விருத்தாசலம் கிளை சிறைச்சாலையில் கைதிக்கு கொரோனா தொற்று

Published On 2021-05-15 05:31 GMT   |   Update On 2021-05-15 05:31 GMT
விருத்தாசலம் கிளை சிறைச்சாலையில் கைதிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

விருத்தாசலம்:

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே இருசாலகுப்பம் கிராமத்தை சேர்ந்தவர் அருண் என்கிற அருண்குமார். இவர் வேப்பூர் போலீசாரால் போக்சோ சட்டத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார். பின்னர் விருத்தாசலம் கிளை சிறைச்சாலையில் 15 நாள் காவலில் அடைக்கப்பட்டார்.

சிறையில் இருந்த அருண்குமாருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அவரை பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

உடனே வேப்பூர் போலீசார் விருத்தாசலம் கிளை சிறைச்சாலையில் இருந்த அருண்குமாரை மீட்டு ஆம்புலன்ஸ் உதவியுடன் கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதனால் சிறை கைதிகள் இடையே அச்சம் நிலவி வருகிறது.

Tags:    

Similar News