செய்திகள்
பவானிசாகர் அணை

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

Published On 2021-09-30 04:34 GMT   |   Update On 2021-09-30 04:34 GMT
பவானிசாகர் அணையில் இருந்து காலிங்கராயன் பாசனத்திற்காக 500 கன அடி, கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்காக 2,300 கன அடி என மொத்தம் 2,800 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
ஈரோடு:

ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக மழை பொழிவு இல்லாததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்த காணப்பட்டது. இதனால் அணையில் நீர்மட்டம் குறைந்து வந்தது.

இந்நிலையில் நேற்று நீர்ப்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் பரவலாக மழை பெய்ததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து மீண்டும் அதிகரித்துள்ளது. இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 101 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 2 ஆயிரத்து 823 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து காலிங்கராயன் பாசனத்திற்காக 500 கன அடி, கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்காக 2,300 கன அடி என மொத்தம் 2,800 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News