ஆன்மிகம்
கோரிப்பாளையம் தர்காவில் சந்தனக்கூடு திருவிழா

கோரிப்பாளையம் தர்காவில் சந்தனக்கூடு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

Published On 2021-10-25 04:24 GMT   |   Update On 2021-10-25 04:24 GMT
மதுரை கோரிப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள தர்காவில் இந்தாண்டிற்கான உரூஸ் என்னும் சந்தனக்கூடு திருவிழா 23-ம் தேதி தொடங்கி இன்று (25-ந் தேதி) வரை நடக்கிறது.
மதுரை கோரிப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள தர்கா மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த தர்காவில் இந்தாண்டிற்கான உரூஸ் என்னும் சந்தனக்கூடு திருவிழா 23-ம் தேதி தொடங்கி இன்று (25-ந் தேதி) வரை நடக்கிறது. இதையொட்டி 23-ம் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான சந்தனக்கூடு ஊர்வலம் இரவு நடந்தது. அப்போது மின்சார விளக்குகள் அலங்காரத்துடன் மேளதாள வாத்தியங்கள் முழங்க, ஒட்டகம், யானை நாட்டிய குதிரையுடன் சந்தனக்கூடு ஊர்வலம் கோரிப்பாளையத்தில் உள்ள முக்கிய வீதிகளின் வழியாக வலம் வந்து தர்காவை சென்றடைந்தது.

இந்த நிகழ்ச்சியில் பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்பினர், முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் என அனைத்து மதத்தினரும் பெருமளவில் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை தர்கா மேனேஜிங் டிரஸ்டி பாஷல்பாஷா, டிரஸ்டிகள் சையது பாபுஜான், சுல்தான்பாஷா, தாஜுதீன் பாபு மற்றும் விழா குழுவினர் மற்றும் பரம்பரை ஹக்தார்கள் ஆகியோர் கொரோனா தடுப்பு வழிகாட்டுதலின்படி செய்து இருந்தனர்.
Tags:    

Similar News