செய்திகள்
2025-ம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி போட்டியை நடத்த வங்காளதேசம் விருப்பம்
2025-ம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி போட்டியை நடத்த தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் தங்களால் செய்ய முடியும் என்று வங்காளதேச கிரிக்கெட் வாரிய தலைவர் நஜூமுல் ஹசன் கூறியுள்ளார்.
டாக்கா:
ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி 1998-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இதுவரை 8 போட்டிகள் நடந்துள்ளது. கடைசியாக 2017-ம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த போட்டியில் பாகிஸ்தான் அணி இந்தியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் பெற்றது.
இந்த நிலையில், 2025-ம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி போட்டியை நடத்த வங்காளதேசம் விருப்பம் தெரிவித்துள்ளது. இதை அந்நாட்டு கிரிக்கெட் வாரிய தலைவர் நஜூமுல் ஹசன் தெரிவித்தார். போட்டியை நடத்த தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் தங்களால் செய்ய முடியும் என்று அவர் கூறியுள்ளார்.
1998-ம் ஆண்டு அறிமுக ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபியை வங்காளதேசம் தான் நடத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.