செய்திகள்
திருச்சி அணி வீரர் அட்னன் கான்

டிஎன்பிஎல் கிரிக்கெட் - பரப்பரப்பான ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் திருச்சி அணி வெற்றி

Published On 2021-07-25 13:45 GMT   |   Update On 2021-07-25 13:45 GMT
டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் திருச்சி அணியின் வீரர் அட்னன் கான் சிறப்பாக ஆடி 38 பந்துகளில் 53 ரன்கள் எடுத்தார்.
சென்னை:

டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் 8-வது ஆட்டம் இன்று பிற்பகல் தொடங்கியது. டாஸ் வென்ற ரூபி திருச்சி வாரியார்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் மதுரை அணி பேட்டிங் செய்தது. அந்த அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகப்டசமாக கவுசிக் 42 ரன்கள் எடுத்தார். 

138 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திருச்சி அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டகாரர்களாக அமித் சாத்விக், சுமந்த் ஜெயின் களமிறங்கினர். முதல் 3 பந்துகளில் 2 விக்கெட்டுகளை இழந்தது திருச்சி அணி 10 ரன்கள் எடுத்த நிலையில் 3 விக்கெட்டுகளை இழந்து திணறியது.இந்நிலையில் அட்னன் கான் - ஆதித்ய கணேஷ் ஜோடி சிறப்பாக ஆடி ரன்களை சேர்த்தனர்.

சிறப்பாக ஆடிய அட்னன் கான் 38 பந்துகளில் 53 ரன்கள் எடுத்து வெளியேறினார். அதனை தொடர்ந்து அந்தோணி தாஸ் 2, மதிவண்ணன் 6 ஆதித்யா கணேஷ் 41 ரன்களில் வெளியேறினார். பரப்பரப்பான கட்டத்தில் 2 ஓவரில் 11 ரன்கள் தேவைப்பட்டது. கைவசம் 3 விக்கெட் மட்டுமே இருந்தது. 19-வது ஓவரில் 11 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் திருச்சி அணி வெற்றி பெற்றது.

Tags:    

Similar News