செய்திகள்
மரணம்

தண்டவாளத்தில் சென்றபோது ரெயில் மோதாமல் இருக்க பாலத்தில் இருந்து குதித்த மாணவி பலி

Published On 2019-11-15 05:26 GMT   |   Update On 2019-11-15 05:26 GMT
தண்டவாளத்தில் சென்றபோது ரெயில் மோதாமல் இருக்க பாலத்தில் இருந்து குதித்த மாணவி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொழிஞ்சாம்பாறை:

கேரள மாநிலம் வடகராவை சேர்ந்தவர் அனில்குமார். அரசு ஆஸ்பத்திரி ஊழியர். இவரது மகள் ஆதித்யா (வயது 13). அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார்.

சம்பவத்தன்று காலை வழக்கம்போல் பள்ளிக்கு நடந்துசென்றார். அங்குள்ள ரெயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்றபோது மங்களாபுரத்தில் இருந்து கோவைக்கு வந்தது.

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த ஆதித்யா உயிர் தப்பிக்க பாலத்தில் இருந்து குதித்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிசிச்சை அளிக்கப்பட்டது.

பின்னர் மேல் சிகிச்சைக்காக கோழிக்கோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிசிச்சை பலனின்றி ஆதித்யா பரிதாபமாக இறந்தார். இது குறித்து வடகரா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News