செய்திகள்
கொரோனா தடுப்பு உபகரணங்களுக்கு விலை நிர்ணயித்து தமிழக அரசு அரசாணை வெளியீடு
கிருமி நாசினி, முகக்கவசம் உள்ளிட்ட 15 நோய் தடுப்பு மருத்துவ உபகரணங்களுக்கான அதிகபட்ச விலையை தமிழக அரசு நிர்ணயித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து, மக்கள் தன்னைத்தானே காத்துக் கொள்ள கிருமி நாசினி, முகக்கவசம் உள்ளிட்ட கொரோனா தடுப்பு உபகரணங்கள் முக்கியமானவை. கொரோனா காலத்தில் இதற்கான தேவை அதிகரிப்பதால், விலையும் அதிகரிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் 15 நோய் தடுப்பு மருத்துவ உபகரணங்களுக்னாக அதிகபட்ச விலையை அரசு நிர்ணயித்துள்ளது. அதற்கான அரசாணையையும் வெளியிட்டுள்ளது.
அதில் முகக்கவசம்- ரூ. 22, கிருமி நாசினி 200 மி.லி.- 110, பிபிஇ கிட்- ரூ. 273-க்கு மிகாமல் விற்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.