செய்திகள்
கழிவுநீர் வாய்க்காலுக்குள் இருக்கும் குடிநீர் குழாய்.

பல்லடம் அருகே குடிநீரில் கழிவுநீர் கலக்கும் அபாயம்

Published On 2021-09-12 08:40 GMT   |   Update On 2021-09-12 08:40 GMT
குடிநீர் குழாயை இடம் மாற்றி அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பல்லடம்:

பல்லடம் அருகே வீரபாண்டி பகுதியில் ஏ.பி., நகர்,நொச்சிபாளையம் செல்லும் சாலையில் கழிவுநீர் கால்வாய் கட்டிடப்பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் தரைமட்ட பாலம் கட்டப்படுகின்ற இடத்தில் குடிநீர் குழாய் செல்கிறது. இதில் இருந்து மீனாம்பாறை, குப்புச்சிபாளையம் அல்லாளபுரம், அவரப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு குடிநீர் செல்கிறது.

இந்தநிலையில் குடிநீர் குழாய், கட்டப்படுகின்ற கழிவுநீர் வாய்க்காலுக்குள் செல்கிறது. எனவே குடிநீர் குழாயில் உடைப்புகள் ஏற்பட்டால் குடிநீருடன் கழிவுநீர் கலந்து செல்லும் அபாயம் உள்ளது.  எனவே குடிநீர் குழாயை இடம் மாற்றி அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News