செய்திகள்
கைது

17 வயது பெண்ணை மிரட்டி பலருக்கும் விருந்தாக்கிய உறவுப்பெண் உள்பட 4 பேர் கைது

Published On 2019-12-08 13:29 GMT   |   Update On 2019-12-08 13:29 GMT
கேரள மாநிலத்தில் குளிக்கும்போது செல்போனில் படம் எடுத்து 17 வயது பெண்ணை மிரட்டி பலருக்கும் விருந்தாக்கிய உறவுப்பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் கொல்லம் குறிப்புழா பகுதியை சேர்ந்த 17 வயது இளம்பெண் ஒருவர் தனது பெற்றோரிடம் தனியார் நிறுவனத்தில் தனக்கு வேலை கிடைத்திருப்பதாக கூறினார். மேலும் அவர் வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு தினமும் வீட்டில் இருந்து காலையில் புறப்பட்டு சென்றுவிட்டு மாலையில் வீடு திரும்புவார்.  

இந்த நிலையில் கடந்த 9-ந்தேதி வழக்கம்போல வேலைக்கு செல்வதாக கூறி விட்டுச் சென்ற அந்த இளம்பெண் மாயமாகிவிட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மகளை பல இடங்களிலும் தேடினார்கள். ஆனாலும் அவர் எங்கு சென்றார் என்ற தகவல் கிடைக்கவில்லை.

மறுநாள் காலையில் உறவுக்கார பெண் ஒருவர் அந்த இளம்பெண்ணை அவரது பெற்றோர் வீட்டிற்கு அழைத்துவந்தார். திருவனந்தபுரம் பகுதியில் தவித்துக்கொண்டிருந்த போது தான் பார்த்து அவரை வீட்டிற்கு அழைத்து வந்ததாக கூறி அந்த பெண்ணை பெற்றோரிடம் ஒப்படைத்துவிட்டு அவர் சென்றுவிட்டார். அதன்பிறகு அவரது நடவடிக்கையில் சந்தேகப்படும் படியாக பல மாற்றங்கள் தெரியவந்தது. இதனால் அதுபற்றி பெற்றோர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். மேலும் அந்த பெண்ணுக்கு கவுன்சிலிங்கிற்கும் ஏற்பாடு செய்யப்பட்டது.

அப்போது பல்வேறு திடுக்கிடும் தகவல்களை அந்த பெண் தெரிவித்தார். அவர் வீட்டில் குளிக்கும் போது உறவுக்கார பெண் தனது செல்போனில் ரகசியமாக படம்பிடித்து உள்ளார். மேலும் தனது சொல்படி கேட்காவிட்டால் அதை இணையதளத்தில் வெளியிட்டு விடுவேன் என்று மிரட்டினார். இதனால் பயந்துபோன இளம்பெண்ணை பலருக்கும் அவர் விருந்தாக்கி உள்ளார். திருவனந்தபுரம், கொல்லம், கொட்டியம் உள்பட பல இடங்களுக்கும் அழைத்துச் சென்று லாட்ஜ்களில் அறை எடுத்து தங்க வைத்து விபச்சாரத்தில் ஈடுபடுத்தி பணம் சம்பாதித்து உள்ளார்.

இதைத்தொடர்ந்து இளம்பெண்ணை பலருக்கும் விருந்தாக்கிய உறவுப் பெண் லினட் (வயது 30), கருநாகப் பள்ளியில் லாட்ஜ் நடத்தி வந்த பிரதீப் (33), ரினு (33), நசீம் (42) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். கடந்த 1990-ம் ஆண்டு கேரள மாநிலம் சூரிய நெல்லி என்ற இடத்தில் 14 வயது பள்ளி சிறுமியை 40 நாளில் 37 பேர் கற்பழித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதேப்போல இந்த சம்பவமும் நடைபெற்று உள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News