செய்திகள்
கைது

வழிப்பறி செய்தவர் குண்டர் சட்டத்தில் கைது

Published On 2021-01-27 12:39 GMT   |   Update On 2021-01-27 12:41 GMT
வழிப்பறி செய்தவர் குண்டர் சட்டத்தில் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
ராமநாதபுரம்:

தூத்துக்குடி கோவில் பிள்ளை தெரு பகுதியை சேர்ந்த சுப்பையா என்பவரின் மகன் காளிராஜ் (வயது 46). இவர் மீது ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி மற்றும் உச்சிப்புளி காவல் நிலையங்களில் வழிப்பறி மற்றும் செயின் பறிப்பு வழக்குகள் நிலுவையில் உள்ளன. செயின் பறிப்பு வழக்கில் கைதாகி சிறையில் உள்ள இவர் தொடர்ந்து இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருவதை தொடர்ந்து குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் பரிந்துரை செய்ததை ஏற்று மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அதற்கான உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து உச்சிப்புளி போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமரன் மேற்கண்ட காளிராஜை குண்டர் சட்டத்தில் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தார்.
Tags:    

Similar News