உள்ளூர் செய்திகள்
தச்சநல்லூர் பகுதியில் நாளை மறுநாள் மின்தடை
பராமரிப்பு பணிகள் காரணமாக தாழையூத்து பகுதியில் நாளை மறுநாள் மின் விநியோகம் இருக்காது என அதிகாரி தெரிவித்துள்ளார்.
நெல்லை:
நெல்லை நகர்புற மின் விநியோக செயற்பொறியாளர் முத்துக்குட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
தச்சநல்லூர் துணை மின்நிலையத்தில் நாளை மறுநாள் (27-ந் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
எனவே தச்சநல்லூர், நல்மேய்ப்பர்நகர், செல்வவிக்னேஷ் நகர், பாலாஜி அவன்யூ, வடக்கு பாலபாக்யா நகர், தெற்கு பாலபாக்யா நகர், மதுரை ரோடு, திலக்நகர், பாபுஜி நகர், சிவந்திநகர், கோமதிநகர், சிந்துபூந்துறை, மணிமூர்த்திஸ்வரம் மற்றும் இருதயநகர் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.