ஆட்டோமொபைல்
எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஸ்கோடா நெக்ஸ்ட் லெவல் திட்டம்
ஸ்கோடா நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார் மாடல்கள் வெளியீடு குறித்த புதிய தகவல் வெளியாகி உள்ளது.
ஸ்கோடா நிறுவனம் ஐரோப்பாவின் முன்னணி ஆட்டோமொபைல் விற்பனையாளர் என்ற பெருமையை பெற அசத்தலான எதிர்கால திட்டத்தை வகுத்துள்ளது. இத்துடன் எலெக்ட்ரிக் வாகனங்கள் எண்ணிக்கையை கணிசமாக அதிகரிக்கவும் ஸ்கோடா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அதன்படி 2030 ஆம் ஆண்டு வாக்கில் 50 சதவீத ஸ்கோடா மாடல்கள் எலெக்ட்ரிக் வாகனங்களாக மாற்றப்பட இருக்கின்றன.
ஸ்கோடா எதிர்கால திட்டத்தை `நெக்ஸ்ட் லெவல்' என அழைக்கிறது. இந்த திட்டத்தின் கீழ் ஐரோப்பிய சந்தையில் எலெக்ட்ரிக் வாகனங்கள் பிரிவில் 2030 ஆம் ஆண்டு வாக்கில் சுமார் 70 சதவீத பங்குகளை பெற ஸ்கோடா இலக்கு நிர்ணயித்துள்ளது. 2022 என்யார்க் கூப் மாடலை காம்பேக்ட் கிராஸ்-ஓவர் மாடலாக மாற்ற ஸ்கோடா முடிவு செய்துள்ளது.
இத்துடன் வோக்ஸ்வேகன் குழுமத்தின் MEB-லைட் பிளாட்பார்மை பயன்படுத்தி சிறிய ரக அர்பன் எலெக்ட்ரிக் கார்களை உருவாக்கவும் ஸ்கோடா திட்டமிட்டு உள்ளது. ஐரோப்பா மட்டுமின்றி இந்தியா, ரஷ்யா மற்றும் வட ஆப்ரிக்கா சந்தைகளிலும் முன்னணி இடம்பிடிக்க ஸ்கோடா இலக்கு நிர்ணயித்துள்ளது. அதன்படி இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் குஷக் மாடலை மற்ற சந்தைகளில் அறிமுகம் செய்ய இருக்கிறது.