செய்திகள்
தற்கொலை

பல்லடத்தில் இளம்பெண் தற்கொலை- போலீசார் விசாரணை

Published On 2020-01-10 10:16 GMT   |   Update On 2020-01-10 10:16 GMT
பல்லடத்தில் 19வயது இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பல்லடம்:

விருதுநகரைச் சேர்ந்த மயில்சாமி மகள் அனுசுயா (19). இவர் பல்லடம் கொசவம்பாளையம் ரோட்டில் உள்ள தனியார் டெக்ஸ்டைல்ஸ் கம்பெனியில் கடந்த 5 மாதங்களாக தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.

அந்தக் கம்பெனியில் உள்ள விடுதியிலேயே தங்கியுள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சிப்ட் வேலை பார்த்தவர் பகலில் தூங்கி விட்டு நேற்று இரவு 8.30 சிப்ட் வேலைக்கு வரவேண்டும் ஆனால் வரவில்லை.

இதனால் இவரது சிப்ட் மாற்று தொழிலாளியான ஐஸ்வர்யா என்ற பெண் இவரது அறைக்கு சென்றுள்ளார். அனுசுயாவின் அறைக்கதவு உள்பக்கமாக பூட்டி இருந்தது. இதையடுத்து கதவை நீண்ட நேரம் தட்டியும் கதவு திறக்காததால் சந்தேகமடைந்து டெக்ஸ்டைல்ஸ் நிர்வாகத்திடம் சொல்லியுள்ளார். உடனே அவர்கள் வந்து கதவைத் திறந்து பார்த்தபோது உள்ளே மின்விசிறியில் சேலையால் தூக்குப்போட்டு அனுசுயா தொங்கிக்கொண்டிருந்தார்.

உடனே அவரை இறக்கி பல்லடம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினார்கள். இதுகுறித்து பல்லடம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்
Tags:    

Similar News