செய்திகள்
கொள்ளை

மேலூர் அரசு கிரானைட் பாலீஷ் தொழிற்சாலையில் கொள்ளை

Published On 2021-10-13 09:45 GMT   |   Update On 2021-10-13 09:45 GMT
மேலூர் அரசு கிரானைட் பாலீஷ் தொழிற்சாலையில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலூர்:

மேலூர் மில் கேட் பகுதியில் அரசுக்கு சொந்தமான கிரானைட் கற்கள் மெரு கூட்டும் தொழிற்சாலை உள்ளது.

தற்போது இந்த தொழிற்சாலை இயங்காமல் உள்ளது. இதில் கிரானைட் கற்களை பாலீஷ் செய்யவும் வெட்டி எடுக்கவும் 640 ராடுகள் உள்ளன. ஆனால் இதனை நேற்று ஆய்வு செய்தபோது 149 ராடுகள் கொள்ளை போயிருந்தது. இதனுடைய மதிப்பு ரூ. 10ஆயிரம் ஆகும்.

இதுகுறித்து கிரானைட் பாலீஷ் தொழிற்சாலையின் மேலாளர் ஜெயசேகர் மேலூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் மேலூர் சப்-இன்ஸ்பெக்டர் கமலமுத்து வழக்குப்பதிவு செய்து திருடிய மர்ம நபர்களை தேடி வருகிறார்.

Tags:    

Similar News