செய்திகள்
கைது

பொன்னமராவதி அருகே காரில் மதுபாட்டில் கடத்தி வந்த வாலிபர் கைது

Published On 2021-06-08 12:26 GMT   |   Update On 2021-06-08 12:26 GMT
பொன்னமராவதி அருகே காரில் மதுபாட்டில் கடத்தி வந்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொன்னமராவதி:

பொன்னமராவதி அருகே வலையப்பட்டி பகுதியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் தனபாலன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது வலையப்பட்டி மலையாண்டி கோவில் பகுதியில் வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தனர். சோதனையில் அதில் மதுபாட்டில்கள் கடத்தி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் காரில் இருந்த 40 மதுபாட்டில்களையும், காரையும் பறிமுதல் செய்தனர். காரில் இருந்த சுரேஷ் (வயது 31) என்பவரை கைது செய்தனர்.
Tags:    

Similar News