ஸ்லோகங்கள்
வராஹி

எதையும் சாதிக்கும் வல்லமை தரும் வராஹி மந்திரம்

Published On 2022-02-26 05:05 GMT   |   Update On 2022-02-26 05:05 GMT
தொடர்ச்சியாக ஐந்து பஞ்சமிகளில் விரதம் இருந்து இந்த மந்திரத் சொல்லி வாராஹியை வழிபாடு செய்து வர கேட்ட வரத்தை அள்ளித் தருவாள் வாராஹி.
சப்த மாதர்களில் ஐந்தாவதாகத் தோன்றியவள் தான் வாராஹி. இவளே சேனாதிபதி. இவள் விஷ்ணு அம்சம். பாண்டவர்களின் கிருஷ்ண பரமாத்மா போன்று நம்மை துன்பங்களிலிருந்து விடுபடச் செய்யவும், எதிரிகளிடமிருந்து நம்மைக் காக்கவும் வாராஹி வழிபாடு சாலச் சிறந்தது.

ஓம் ச்யாமளாயை விக்மஹே
ஹல ஹஸ்தாயை தீமஹி
தன்னோ வராஹி ப்ரசோதயாத்

என்ற இந்த வராஹி மந்திரத்தை 108 முறை ஜெபித்து (இந்த மந்திரத்தை ஜெபிப்போருக்கு எதையும் சாதிக்கும் வல்லமை உருவாகும். மனதில் தைரியம் பிறக்கும். கேட்ட வரங்கள் கிடைக்கும்)

நாயகி, நான்முகி…மாலினி ,வாராஹி, சூலினி மாதங்கி என்றாயகி யாதி உடையாள் சரணம்’ என்றும், ‘பயிரவி, பஞ்சமி…வாராஹி என்றே செயிர் அவி நான்மறை சேர் திருநாமங்கள் செப்புவரே’  என்றும் அபிராமி பட்டர் அபிராமி அந்தாதியில் கொண்டாடிய அன்னையின் வாராஹி வழிபாடு நம்மை அனைத்து இன்னல்களில் இருந்தும் காப்பாற்றுகிறது.
Tags:    

Similar News