உள்ளூர் செய்திகள்
FILEPHOTO

விஷம் குடித்த பெண் சிகிச்சை பலனின்றி சாவு

Published On 2022-05-06 09:44 GMT   |   Update On 2022-05-06 09:44 GMT
விஷம் குடித்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
பெரம்பலூர் :

பெரம்பலூர் அருகே உள்ள பாளையத்தை சேர்ந்தவர் சங்கர். இவரது மனைவி கவிதா (வயது37). இவர்களுக்கு அபிஷேக்(15), ஜீவிதா (11) என்ற  இரு குழந்தைகள் உள்ளனர். கணவன், மனைவிக்கிடையே அடிக்கடி குடும்ப பிரச்சனை வருமாம்.
 
இதனால் ஆத்திரமடைந்த கவிதா கடந்த 3 மாதங்களாக அவரது பெற்றோர் ஊரான கொப்பம்பட்டிக்கு சென்று அங்கேயே தங்கியுள்ளார். கடந்த 4 நாட்களுக்கு முன்பு பாளையம் வந்துள்ளார்.

ஊரில் இருந்து வந்த கவிதா  வீட்டிலிருந்த சாணி பவுடரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். இதனை பார்த்த  உறவினர்கள் அவரை மீட்டு, பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்சிக்கு சென்று கொண்டிருக்கும் பொழுது செல்லும் வழியிலேயே கவிதா இறந்துவிட்டார்.

 இது குறித்த புகாரின்பேரில் பெரம்பலூர் போலீசார் வழக்குபதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Tags:    

Similar News