செய்திகள்
கைது

பணம் வைத்து சூதாடிய 4 பேர் கைது

Published On 2020-10-15 09:41 GMT   |   Update On 2020-10-15 09:41 GMT
ஈரோடு சேனாதிபதிபாளையம் பகுதியில் பணம் வைத்து சூதாடிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு:

ஈரோடு சேனாதிபதிபாளையம் பகுதியில் சிலர் பணம் வைத்து சூதாடுவதாக ஈரோடு தாலுகா போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அப்போது வட்டமாக அமர்ந்து சிலர் சூதாடிக்கொண்டு இருந்தனர். அவர்கள் போலீசாரை பார்த்ததும் அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர். உடனே போலீசார் அவர்களை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள் ஈரோடு ரங்கம்பாளையம் அண்ணா நகர் பகுதியை சேர்ந்த பூபதி (வயது 25), சக்திவேல் என்கிற லிங்கேஸ்வரன் (25) மற்றும் 19 வயது வாலிபர், திண்டல் தெற்கு பள்ளம் பகுதியை சேர்ந்த ஸ்ரீதர் (25) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.300 மற்றும் சீட்டு கட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
Tags:    

Similar News