ஆன்மிகம்
காத்யாயனி தேவி

திருமணத் தடைகள் நீக்கும் தேவி ஸ்லோகம்

Published On 2021-08-14 01:36 GMT   |   Update On 2021-08-14 01:36 GMT
ஆண்டாள் அவதரித்த நட்சத்திர தினமான பூர நட்சத்திரத்தன்று இத்துதியை ஜபம் செய்தால் கண்ணனைப் போன்ற தோற்றப்பொலிவு, புத்திசாலித்தனம் பொருந்திய கணவர் அமைவார்.
காத்யாயனி! மஹாமாயே!
மஹாயோகின்யதீஸ்வரி!
நந்தகோபஸுதம் தேவி
பதிம்மே குருதே நமஹ:

- ஆண்டாள் சொன்ன தேவி துதி.

பொதுப் பொருள்: அனைவரையும் காத்தருளும் கருணைமிக்க காத்யாயனி தேவியே உனக்கு நமஸ்காரம். எல்லாவகை மாயைகளையும் பொருளுணர்த்தி விளங்க வைப்பவளே உனக்கு நமஸ்காரம். மகத்தான யோக சித்திகளை அடைந்தவளே உனக்கு நமஸ்காரம். நந்தகோபருடைய புத்திரரான கண்ணனே எனக்குக் கணவனாக அமைய வேண்டும். அந்த பாக்கியத்தை தேவி நீ எனக்கு அருள்வாயாக.கண்ணனை ஆண்டாள் கணவராக அடைய உதவிய இந்த மகத்தான ஸ்லோகத்தை, திருமணத்திற்காகக் காத்திருக்கும் பெண்கள் வெள்ளிக்கிழமைகளில் சொல்லலாம். தம் மனதில் தாம் கணவனாக வரித்திருக்கும் ஆண்மகனையே தன் வாழ்க்கைத் துணையாகப் பெறுவதும் சாத்தியமாகும். முக்கியமாக ஆண்டாள் அவதரித்த நட்சத்திர தினமான பூர நட்சத்திரத்தன்று இத்துதியை ஜபம் செய்தால் கண்ணனைப் போன்ற தோற்றப்பொலிவு, புத்திசாலித்தனம் பொருந்திய கணவர் அமைவார்.

Tags:    

Similar News