செய்திகள்
மகள் காதல் திருமணம் செய்ததால் விரக்தி- தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை
மகள் காதல் திருமணம் செய்ததால் விரக்தி அடைந்த தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை:
பொள்ளாச்சி வைகை நகரை சேர்ந்தவர் கார்த்திகேயன் (56) தொழிலாளி. இவரது மகள் பெற்றோர் எதிர்ப்பை மீறி வாலிபர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதனால் மனவேதனையில் இருந்த கார்த்திகேயன் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு பொள்ளாச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி இறந்தார்.
இது குறித்து பொள்ளாச்சி கிழக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை தடாகம் பகுதியை சேர்ந்தவர் சரவணகுமார் (42). டிராவல்ஸ் வைத்து நடத்தி வந்தார். இவருக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டது. இதனால் குடிப்பழக்கத்திற்கு அடிமையானார். தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் மன வேதனையில் இருந்து வந்தார்.
சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். வெளியே சென்று இருந்த அவரது மனைவி வீடு திரும்பிய போது சரவணகுமார் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து தடாகம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பொள்ளாச்சி வைகை நகரை சேர்ந்தவர் கார்த்திகேயன் (56) தொழிலாளி. இவரது மகள் பெற்றோர் எதிர்ப்பை மீறி வாலிபர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதனால் மனவேதனையில் இருந்த கார்த்திகேயன் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு பொள்ளாச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி இறந்தார்.
இது குறித்து பொள்ளாச்சி கிழக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை தடாகம் பகுதியை சேர்ந்தவர் சரவணகுமார் (42). டிராவல்ஸ் வைத்து நடத்தி வந்தார். இவருக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டது. இதனால் குடிப்பழக்கத்திற்கு அடிமையானார். தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் மன வேதனையில் இருந்து வந்தார்.
சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். வெளியே சென்று இருந்த அவரது மனைவி வீடு திரும்பிய போது சரவணகுமார் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து தடாகம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.