செய்திகள்
வழக்கு பதிவு

ஜெயங்கொண்டம் அருகே வயலில் ஆடுமேய்ந்த தகராறில் 4 பேர் மீது வழக்கு

Published On 2021-09-06 10:14 GMT   |   Update On 2021-09-06 10:14 GMT
ஜெயங்கொண்டம் அருகே வயலில் ஆடுமேய்ந்த தகராறில் 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜெயங்கொண்டம்:

ஜெயங்கொண்டம் அருகே உள்ள இலையூர் மேலவெளி கிராமத்தைச் சேர்ந்தவர் தமிழரசன் (வயது 42). கூலி தொழிலாளி. இவரது மனைவி சந்தியா. இவர் தனது வயலில் ஆடு மேய்ந்து விட்டதாக கூறி திட்டிக்கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த கவிதா தன்னை திட்டுவதாக கூறி தமிழரசன் மனைவியிடம் சண்டை போட்டுச் சென்றதாக கூறப்படுகிறது. மேலும் கவிதாவின் கணவர் சக்திவேல், அவரது மகன் அருண், மகாதேவன் ஆகியோர் ஒன்று சேர்ந்து சந்தியாவின் வீட்டிற்கு வந்து சந்தியாவை தகாத வார்த்தைகளால் திட்டி கட்டையால் தாக்கியதாக கூறப்படுகிறது. காயமடைந்த சந்தியா ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சிகிச்சையில் இருந்தவாறு சந்தியா இதுகுறித்து ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் தகராறில் ஈடுபட்ட சக்திவேல், அருண், மகாதேவன், கவிதா ஆகிய 4 பேர் மீதும் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News