செய்திகள்
மின்சாரம் நிறுத்தம்

அழகர்கோவில்- சோழவந்தானில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

Published On 2019-11-05 09:57 GMT   |   Update On 2019-11-05 09:57 GMT
அழகர்கோவில், சோழவந்தானில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகளை மின்வாரியம் அறிவித்துள்ளது.

மதுரை:

மதுரை அழகர்கோவில், சோழவந்தானில் உள்ள துணை மின் நிலையங்களில் நாளை (புதன்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை பெறுகிறது.

எனவே நாளை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை பொய்கைகரைப்பட்டி, நாயக்கன்பட்டி, கள்ளந்திரி, சின்னமாங்குளம், அழகர் கோவில், அழகாபுரி, உப்போடைப்பட்டி, கிடாரிப்பட்டி, வெள்ளியங்குன்றம், புதூர், கண்டமுத்துப்பட்டி, கடவூர், பஞ்சம்தாங்கிபட்டி, தொண்டமான்பட்டி, மஞ்சம் பட்டி, ஆமாந்தூர்பட்டி, தொப்பலாம்பட்டி, கெமிக்கல்ஸ் ஆகிய பகுதிகள்.

சோழவந்தான், தச்சம் பத்து, திருவேடகம், மேலக்கால், கச்சிராயிருப்பு, நாராயணபுரம், ஊத்துக்குளி, தென்கரை, முள்ளிப்பள்ளம், மன்னாடிமங்கலம், காடுப்பட்டி, இரும்பாடி, ஆலங்கொட்டாரம், ரிசபம், ராயபுரம், நகரி தொழிற்சாலைகள் மற்றும் சோழவந்தான் துணைமின் நிலையத்தில் இருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

இந்த தகவலை மின் செயற்பொறியாளர்கள் சாதத் துனிசா, மனோகரன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News