செய்திகள்
கொரோனா வைரஸ்

திருவையாறு பகுதியில் 26 பேருக்கு கொரோனா பாதிப்பு- அதிகாரிகள் தடுப்பு நடவடிக்கை

Published On 2021-05-13 09:44 GMT   |   Update On 2021-05-13 09:44 GMT
கொரோனா தொற்று ஏற்பட்ட குடும்பத்தில் உள்ளவர்கள் பரிசோதனை செய்து கொள்ளவும் தனிமைப்படுத்திக் கொள்ளவும் அதிகாரிகள் அறிவுரை வழங்கினர்.

திருவையாறு:

திருவையாறு பேரூராட்சி பகுதியில் 13 பேருக்கும், கீழப்புனவாசலில் ஒருவருக்கும், வரகூரில் 3 பேருக்கும், அந்தளியில் ஒருவருக்கும், ராயம்பேட்டையில் ஒருவருக்கும், பெரமூரில் ஒருவருக்கும், கடுவெளியில் ஒருவருக்கும், பொன்னாவரை 2 பேருக்கும், கண்டியூரில் ஒருவருக்கும், வில்லியநல்லூரில் ஒருவருக்கும், ஆச்சனூரில் ஒருவருக்கும் ஆக மொத்தம் 26 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு 26 பேரும் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

தகவல் அறிந்த திருவையாறு தாசில்தார் நெடுஞ்செழியன், ஒன்றிய ஆணையர்கள், கணேசன், நந்தினி, வருவாய் ஆய்வாளர்கள், சாந்தி, மஞ்சு, பேரூராட்சி செயல் அலுவலர் ராஜா, துப்புரவு ஆய்வாளர் செந்தில்குமார், நடுக்காவேரி அரசு மருத்துவமனை வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சதாசிவம் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் சம்மந்தப்பட்ட தெருக் களுக்கும், கிராமங்களுக்கும் சென்று கிருமி நாசினி தெளித்தனர். மேலும் கொரோனா தொற்று ஏற்பட்ட குடும்பத்தில் உள்ளவர்களுக்கு பரிசோதனை செய்து கொள்ளவும் தனிமைப்படுத்திக் கொள்ளவும் அறிவுரை வழங்கினர்.

Tags:    

Similar News