லைஃப்ஸ்டைல்
கூந்தல் உதிர்வு, பொடுகு பிரச்சனை தீர்க்கும் நெல்லிக்காய்

கூந்தல் உதிர்வு, பொடுகு பிரச்சனை தீர்க்கும் நெல்லிக்காய்

Published On 2021-01-07 03:10 GMT   |   Update On 2021-01-07 03:10 GMT
உங்கள் அனைத்து கூந்தல் பிரச்சனைகளுக்கும் தீர்வாக கூடிய மற்றும் உங்கள் கூந்தல் ஆரோக்கியத்தை உடனடியாக மாற்றிக்காட்டும் ஆற்றலும் கொண்ட ஒரு அற்புத பொருள் தான் நெல்லிக்கனி.
உங்கள் அனைத்து கூந்தல் பிரச்சனைகளுக்கும் தீர்வாக கூடிய மற்றும் உங்கள் கூந்தல் ஆரோக்கியத்தை உடனடியாக மாற்றிக்காட்டும் ஆற்றலும் கொண்ட ஒரு அற்புத பொருள் தான் நெல்லிக்கனி. உங்கள் கூந்தலுக்கு எண்ணற்ற விதங்களில் உதவி செய்யக்கூடியதாக இருக்கிறது. தலைமுடி உதிர்வதை தடுப்பது முதல் பொடுகை போக்குவது வரை இந்த கனி உங்களுக்கு உதவி கூந்தலின் மங்கலான தன்மையை மாற்றி பளபளக்க வைக்க கூடியது. எப்படி என் பார்கக்லாம் வாருங்கள்...

* உங்கள் உச்சந்தலையை நெல்லிக்கனி எண்ணெய் கொண்டு மசாஜ் செய்வது தலைமுடியை வலுவாக்கி, முடி உதிர்வதை கட்டுப்படுத்தும். இது இரத்த ஓட்டத்தையும் சீராக்கி, உச்சந்தலைக்கு ஊக்கம் அளித்து, தலைமுடி வளர்ச்சியை அதிகமாக்குகிறது. இதன் கிருமி எதிர்ப்பு தன்மை பொடுகு மற்றும் உச்சந்தலை அரிப்பை கட்டுப்படுத்துகிறது. இந்த எண்ணெயை பயன்படுத்தும் முன், கொஞ்சம் சூடாக்கி, வாரம் இரு முறை உச்சந்தலையில் மசாஜ் செய்து கொள்ளவும்.

* தலைமுடியை வலுவாக்கும் மாஸ்க்கான நெல்லிக்கனி- யோகர்ட் மாஸ்க் உங்கள் கூந்தலில் மகத்தான மாற்றங்களை நிகழ்த்தக்கூடியது, இரண்டு ஸ்பூன் நெல்லி பொடியை எடுத்துக்கொண்டு அதில் சூடான நீர் ஊற்றி கலந்து கொள்ளவும். இப்போது ஸ்பூன் தேன் அல்லது 2 ஸ்பூன் யோகர்ட் ஊற்றி நன்றாக கலந்து கூந்தலில் பூசிக்கொள்ளவும். 30 நிமிடம் அப்படியே வைத்திருந்து பின்னர் இதமான நீரில் அலசவும்.

* உங்கள் மயிர்கால்களில் ஆம்லா சாறை பயன்படுத்துவது தலை முடியில் கொலாஜன் அளவை அதிகமாக்கி, தலை முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. உச்சந்தலையை ஐந்து நிமிடம் மசாஜ் செய்து கொள்ளவும். பின்னர் 10 நிமிடங்கள் கழித்து மிதமான ஷாம்பு கொண்டு மிதமான நீரில் அலசிக்கொள்ளவும்.

* இப்போது முன்கூட்டியே நரை முடி தோன்றுவது சகஜமான பிரச்சனையாக இருக்கிறது. தலைமுடி நரைப்பதை சீராக்கி, மங்கலான கூந்தலை பளபளக்க வைக்கும் ஆற்றல் நெல்லிக்கனிக்கு இருக்கிறது. நெல்லிக்கனி துண்டு மற்றும் அதன் சாற்றை எடுத்துக்கொண்டு, தண்ணிர் கலந்து 30 நிமிடம் கொதிக்க வைக்கும். பின்னர் இந்த கலவையை குளிர வைத்து, அதில் உள்ள திடமான பொருட்களை நீக்கிவிட்டு, மிச்சமுள்ள கலவை கொண்டு கூந்தலை அலசவும்.
Tags:    

Similar News