ஆன்மிகம்
பகவதி அம்மன்

மார்த்தாண்டத்தில் பகவதி அம்மன் கோவில் திருவிழா இன்று தொடங்குகிறது

Published On 2021-02-12 06:55 GMT   |   Update On 2021-02-12 06:55 GMT
மார்த்தாண்டம் குறும்பேற்றிநகர் பகவதியம்மன் கோவில் திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி 16-ந் தேதி வரை நடக்கிறது.
மார்த்தாண்டம் குறும்பேற்றிநகர் பகவதியம்மன் கோவில் திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி 16-ந் தேதி வரை நடக்கிறது. இன்று பகல் 11 மணிக்கு கணபதிக்கு அபிஷேகம், மாலை 7 மணிக்கு 1008 திருவிளக்கு பூஜை போன்றவை நடக்கிறது.

நாளை (சனிக்கிழமை) காலை 11 மணிக்கு சிவபெருமானுக்கு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள், 14-ந் தேதி காலையில் பண்பாட்டு போட்டிகள், இரவு 8 மணிக்கு மகளிர் மாநாடு, 15-ந் தேதி காலையில் கலச பூஜை, கலசாபிஷேகம், இரவு 8 மணிக்கு இந்து சமய ஆன்மிக மாநாடு போன்றவை நடைபெறும்.

விழாவின் இறுதி நாளான 16-ந் தேதி காலை 10 மணிக்கு பொங்கல் வழிபாடு, மாலை 7 மணிக்கு அம்மனுக்கு புஷ்பாபிஷேகம், இரவு 8 மணிக்கு முன்னாள் பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா கலந்துகொள்ளும் ஆன்மிக சிறப்பு மாநாடு ஆகியவை நடைபெறும்.

திருவிழா ஏற்பாடுகளை குறும்பேற்றி பகவதியம்மன் அறக்கட்டளை செய்து வருகிறது.
Tags:    

Similar News