செய்திகள்
வழக்கு பதிவு

நெல்லையில் வரதட்சணை கேட்டு இளம்பெண் சித்ரவதை- 5 பேர் மீது வழக்கு

Published On 2021-09-23 11:27 GMT   |   Update On 2021-09-23 11:27 GMT
நெல்லையில் வரதட்சணை கேட்டு இளம்பெண் சித்ரவதை செய்தது தொடர்பாக கணவர் உட்பட 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
நெல்லை:

தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தைச் சேர்ந்தவர் பொன்மாரி (வயது 30).

இவருக்கும் நெல்லை டவுனை சேர்ந்த மாரியப்பன் என்பவருக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. கணவன்- மனைவி இருவரும் நெல்லை டவுனில் உள்ள மாரியப்பன் வீட்டில் குடியிருந்து வந்தனர்.

அப்போது கணவர் மாரியப்பனும், அவரது உறவினர்களும் கூடுதல் வரதட்சணை கேட்டு பொன்மாரியை சித்ரவதை செய்ததாக கூறப்படுகிறது.

இதனால் கணவர் வீட்டிலிருந்து தாய் வீட்டிற்கு சென்ற பொன்மாரி, நெல்லை அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார்.

மகளிர் போலீசார் விசாரணை நடத்தி, பொன்மாரியின் கணவர் மாரியப்பன் மற்றும் அவரது உறவினர்கள் பன்னீர் செல்வம், சித்ரா, மணி, புவனேஸ்வரி ஆகிய 5 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News