செய்திகள்
திருட்டு

ஓய்வு பெற்ற பி.எஸ்.என்.எல். ஊழியர் வீட்டில் நகை- பணம் திருட்டு

Published On 2021-10-08 09:47 GMT   |   Update On 2021-10-08 09:47 GMT
ஓய்வு பெற்ற பி.எஸ்.என்.எல். ஊழியர் வீட்டில் நகை- பணம் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆண்டிமடம்:

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள ராங்கியம் கிராமம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வைரம்(வயது 58). பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் பணியாற்றிய இவர், விருப்ப ஓய்வு பெற்று வீட்டில் இருந்து வருகிறார். இவரது கணவர் ஏற்கனவே இறந்து விட்டார். வைரத்தின் மகன் மற்றும் மகள்கள் திருமணமாகி வெளியூரில் தனித்தனியாக வசித்து வருகின்றனர். இதனால் வைரம் மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்தார். இவர் சம்பவத்தன்று இரவு வீட்டின் கதவுகளை பூட்டிவிட்டு, வீட்டிற்குள் தூங்கினார். மறுநாள் எழுந்து வீட்டின் முன்பக்க கதவை திறக்க முயன்றபோது, கதவின் தாழ்ப்பாள் உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்பக்க கதவும் திறந்து கிடந்தது. மேலும் மற்றொரு அறைக்கு சென்று பார்த்தபோது, அங்கிருந்த இரும்பு பீரோ உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. அதில் வைத்திருந்த 3 பவுன் சங்கிலி, 3 ஜோடி தோடு, கம்மல், தங்கக்காசு என 4½ பவுன் நகைகளும், வெள்ளிப்பொருட்கள் குத்து விளக்கு, டம்ளர், கிண்ணம், கரண்டி மற்றும் ரூ.38 ஆயிரம் என மொத்தம் ரூ.1½ லட்சம் மதிப்பிலான பொருட்கள் திருட்டு போனது தெரியவந்தது. இது குறித்து ஆண்டிமடம் போலீஸ் நிலையத்தில் வைரம் அளித்த புகாரின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோவன் வழக்குப்பதிந்து, திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றார்.
Tags:    

Similar News