ஆன்மிகம்
அத்திவரதர்

வரதர் சிலையை அத்தி மரத்தில் செய்யக்காரணம்

Published On 2019-07-02 09:03 GMT   |   Update On 2019-07-02 09:03 GMT
எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அழியாத நிலையில் இருக்க வேண்டும் என்பதற்காக அத்தி மரத்தில் அந்த பெருமாள் சிலையை பிரம்மா வடித்ததாக புராணங்களில் கூறப்பட்டுள்ளது.
பெருமாள் தனக்கு உதவி செய்ததால் மகிழ்ச்சி அடைந்த பிரம்மா அந்த பெருமாளுக்கு ஒரு சிலை செய்ய முடிவு செய்தார். அந்த சிலை எப்படி அமைய வேண்டும் என்று பெருமாளிடமே அவர் விளக்கம் கேட்டார். உடனே பெருமாள் சங்கு, சக்கரம், கதை தாங்கிய திருக்கோலத்தில் காட்சி அளித்தார்.

சித்திரை மாதம் திருவோணம் நட்சத்திரத்தில் புண்ணிய கோடி விமானத்தில் பெருமாள் இந்த காட்சியை வெளிப்படுத்தினார். இந்த காட்சியை நன்கு பார்த்துக் கொண்ட பிரம்மா தனக்கு தரிசனம் தந்த பெருமாளின் வடிவத்தை அதே மாதிரி சிலையாக வடிவமைத்தார்.

எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அழியாத நிலையில் இருக்க வேண்டும் என்பதற்காக அத்தி மரத்தில் அந்த பெருமாள் சிலையை பிரம்மா வடித்ததாக புராணங்களில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News