வழிபாடு
சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி பூமிதேவியுடன் எழுந்தருளிய சவுமிய நாராயண பெருமாள்.

திருக்கோஷ்டியூர் சவுமியநாராயண பெருமாள் கோவில் மாசி தெப்ப உற்சவம்

Published On 2022-02-17 06:37 GMT   |   Update On 2022-02-17 06:37 GMT
திருப்பத்தூர் அருகே திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணப் பெருமாள் கோவிலில் மாசி மக தெப்பம் நடைபெற்றது. விழாவில் இன்று (வியாழக்கிழமை) காலை தீர்த்தவாரி உற்சவம் நடைபெற உள்ளது.
திருப்பத்தூர் அருகே திருக் கோஷ்டியூர் சவுமிய நாராயணப் பெருமாள் கோவிலில் மாசி மக தெப்ப உற்சவத்திருவிழா கடந்த 7-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினந்தோறும் காலையில் சாமி திருவீதி புறப்பாடும், இரவு சிம்மம், அனுமன், கருடசேவை, சேஷ வாகனத்தில் பெருமாள் எழுந்தருளி திருவீதி புறப்பாடும் நடைபெற்றது.

8-ம் திருநாளான நேற்று முன்தினம் இரவு தங்ககுதிரை வாகனத்தில் சாமி புறப்பாடு நடைபெற்றது. 9-ம் திருநாள் அன்று காலையில் வெண்ணைத்தாழி சேவையில் பெருமாள் திருவீதி புறப்பாடும், தெப்பம் முட்டுத்தள்ளுதலும், இரவு பெருமாள் தங்க பல்லக்கில் திருவீதி புறப்பாடு நடைபெற்றது.

10-ம் திருநாளான நேற்று காலை பெருமாள் தங்கத் தோளுக் கினியானில் திருவீதி புறப்பாடும், காலை 11 மணிக்கு மேல் பகல் தெப்பம் சுற்றுதலும், இரவு 9 மணிக்கு பெருமாள் ஸ்ரீதேவி, பூமிதேவியாருடன் மின்ஒளியால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளி தெப்ப உற்சவம் நடை பெற்றது. விழாவில் இன்று (வியாழக்கிழமை) காலை தீர்த்தவாரி உற்சவம் நடைபெற உள்ளது.
Tags:    

Similar News