செய்திகள்
கொலை

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தொழிலாளி கொலை- வாலிபர் வெறிச்செயல்

Published On 2021-08-25 03:41 GMT   |   Update On 2021-08-25 03:41 GMT
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பெண்களை கேலி செய்ததை தட்டிக்கேட்ட தொழிலாளியை வாலிபர் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர்:

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள பட்டக்குளம் அரிய நாயகிபுரத்தை சேர்ந்தவர் முருகன்(வயது 29), கூலி தொழிலாளி. அதே ஊரில் வசித்து வருபவர் லாரன்ஸ் (21). இவருக்கு குடிபழக்கம் உள்ளது.

அடிக்கடி குடித்துவிட்டு பெண்களை கேலி-கிண்டல் செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனை முருகன் பலமுறை கண்டித்தார். இதனால் லாரன்ஸ் ஆத்திரமடைந்தார்.

நேற்று இரவு முருகன் வீட்டு முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த லாரன்ஸ் கையில் வைத்திருந்த அரிவாளால் சரமாரியாக வெட்டினார். பலத்த வெட்டுக்காயம் அடைந்த முருகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். பின்னர் லாரன்ஸ் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக கிருஷ்ணன்கோவில் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து முருகன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

தலைமறைவான லாரன்சை போலீசார் தேடி வருகின்றனர். இச்சம்பவம் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News