செய்திகள்
கைது

பரமத்திவேலூர் அருகே டாஸ்மாக் கடை ஊழியரை தாக்கி ரூ.3.46 லட்சம் பணம் பறிப்பு- 3 பேர் கைது

Published On 2020-09-30 06:36 GMT   |   Update On 2020-09-30 06:36 GMT
டாஸ்மாக் கடை ஊழியரை தாக்கி ரூ.3.46 லட்சம் பணத்தை பறித்து சென்ற 3 பேரை போலீசார் கைது செய்து நாமக்கல் சிறையில் அடைத்தனர்.

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் ராஜா ரணவீரன் தலைமையில் போலீசார் மோகனூர் சாலையில் இருசக்கர வாகன தணிக்கையில் ஈடுப்பட்டனர். அப்போது அந்த வழியாக சந்தேகத்திற்கு இடமாக வந்த 3 பேரை பிடித்து விசாரணை நடத்தி நடத்தினர்.

விசாரணையில் தஞ்சாவூர் மாவட்டம் மேலதிருப் பந்திருத்தியை சேர்ந்த கஜேந்திரன் (37), குலாம் (எ) சதாம் உசேன் (27), கரந்தை பகுதியை சேர்ந்த ஆகாஷ் (19), ஆகியோர் என்பது தெரியவந்தது. மேலும் கடந்த ஆகஸ்ட் 22-ந் தேதி வேலகவுண்டம்பட்டியில் உள்ள டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர் ராஜேந்திரனை கத்தியால் வெட்டியும், மிளகாய் பொடி தூவியும் ரூ.3 லட்சத்து 46 ஆயிரம் ரொக்கப்பணத்தை பறித்ததும், பொய்யேரியில் உள்ள டாஸ்மாக் கடையில் மதுபானம் வாங்கி கொண்டு பணம் தராமல் விற்பனையாளரை கத்தியை காட்டி மிரட்டியதும் தெரியவந்தது.

இதனையடுத்து கஜேந்திரன், ஆகாஷ், குலாம் (எ) சதாம் உசேன் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். பின்னர் வழக்குப்பதிவு செய்து கைதான 3 பேரையும் பரமத்தி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நாமக்கல் கிளை சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News