ஆன்மிகம்
வசந்தபுரத்தில் கரிவரதராஜ பெருமாள் கோவிலில் திருக்கல்யாணம்
கந்தம்பாளையம் அருகே வசந்தபுரத்தில் உள்ள கரிவரதராஜ பெருமாள் கோவிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. இதையடுத்து சாமிக்கு மலர் அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது.
கந்தம்பாளையம் அருகே வசந்தபுரத்தில் உள்ள கரிவரதராஜ பெருமாள் கோவிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. அதன்படி பெண்கள் மாவிளக்கு எடுத்து வந்தும், தீர்த்தம் எடுத்து வரப்பட்டும் சாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. இந்த கோவிலில் திருமணமாகாத பெண்கள், ஆண்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தால் திருமணம் ஆகும் என்பது ஐதீகம். இதனால் திருமணமாகாத ஆண்கள், பெண்கள் பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதையடுத்து சாமிக்கு மலர் அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து கோவில் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர்.
இதையடுத்து சாமிக்கு மலர் அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து கோவில் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர்.