விளையாட்டு
என்னே ஒற்றுமை....வைரலாகும் இந்தியா- நியூசிலாந்து வீரர்கள் புகைப்படம்...
ஒருவரது பெயரின் இரண்டாம் பாதியில் இன்னொருவரின் பெயர் தொடங்குவதால் ஒன்றாக சேர்ந்து புகைப்படம் எடுத்து கொண்டுள்ளனர்.
மும்பை:
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட நியூசிலாந்து அணி மூன்று 20 ஓவர் போட்டி , 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இதில்20 ஓவர் தொடரை 3-0 என்ற புள்ளிகள் கணக்கிலும், டெஸ்ட் தொடரை 1-0 என்ற புள்ளிகள் கணக்கிலும் கைப்பற்றி இந்தியா அபார வெற்றிபெற்றது.
இந்நிலையில், போட்டி முடிந்தபின், இந்திய வீரர்கள் அக்சர் பட்டேல் , ஜடேஜா ஆகியோரும், நியூசிலாந்து வீரர்கள் ரசின் ரவீந்திரா , அஜாஸ் படேல் ஆகியோர் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாகி உள்ளது.
இதில் ஒற்றுமை என்னவென்றால் ஒருவரது பெயரின் இரண்டாம் பாதியில் இன்னொருவரின் பெயர் தொடங்குவதால் ஒன்றாக சேர்ந்து புகைப்படம் எடுத்து கொண்டுள்ளனர். இந்த புகைப்படத்தை அஷ்வின் எடுக்க பிசிசிஐ தனது டுவிட்டரில் பகிர்ந்துள்ளது. இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகின்றது.
நியூசிலாந்து அணிகளுக்காக விளையாடும் ரசின் ரவீந்திரா, அஜாஸ் படேல் ஆகியோர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.