செய்திகள்
துப்பட்டா கழுத்தை இறுக்கி 5-ம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு
கோவையில் விளையாடிய போது துப்பட்டா கழுத்தை இறுக்கி 5-ம் வகுப்பு மாணவன் பரிதாபமாக உயிரிழந்தான்.
கோவை:
கோவை உக்கடம் ஜி.எம்.நகரை சேர்ந்தவர் சதக்கத்துல்லா. இவரது மகன் காஜா உசேன் (வயது 10). இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தார்.
நேற்று மாலை வீட்டில் இருந்த காஜா உசேன் துப்பட்டாவை ஜன்னலில் கட்டி விளையாடிக் கொண்டு இருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக துப்பட்டா கழுத்தில இறுக்கியது. இதில் மூச்சு திணறிய அவர் மயங்கினார்.
இதனை பார்த்து வீட்டில் இருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் மயங்கிய நிலையில் இருந்த காஜா உசேனை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு காஜா உசேனை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து உக்கடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.