உள்ளூர் செய்திகள்
காட்பாடி ரெயில் நிலையத்தில் பா.ம.க.வினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட காட்சி

காட்பாடியில் கிடப்பில் போடப்பட்டுள்ள ரெயில்வே திட்டங்களை நிறைவேற்ற கோரி பா.ம.க.ஆர்ப்பாட்டம்

Published On 2022-04-16 10:27 GMT   |   Update On 2022-04-16 10:27 GMT
காட்பாடியில் கிடப்பில் போடப்பட்டுள்ள ரெயில்வே திட்டங்களை நிறைவேற்ற கோரி பா.ம.க.ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வேலூர்:

பா.ம.க சார்பில் மத்திய ரெயில்வே மந்திரியாக வேலு இருந்தபோது அறிவிக்கப்பட்ட ரெயில்வே திட்ட பணிகளை விரைந்து முடிக்க கோரி இன்று காட்பாடி ரெயில் நிலையம் முன்பாக பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

ஆர்ப்பாட்டத்-திற்கு பா.ம.க மாவட்ட செயலாளர் இளவழகன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர்கள் பி. கே.வெங்கடேசன், கே.வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

 கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்பு ரெயில்வே மந்திரியாக இருந்த வேலு திண்டிவனம்-நகரி, திருவண்ணாமலை -திண்டிவனம், தர்மபுரி-மொரப்பூர், ஸ்ரீபெரும்புதூர்- கூடுவாஞ்சேரி, சென்னை- மகாபலிபுரம்- கடலூர், ஈரோடு மாவட்டம் அந்தியூர் ரெயில்வே திட்ட பணிகளை அறிவித்தார். கடந்த 16 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ள திட்ட பணிகளை விரைந்து முடிக்க கோரி கோஷமிட்டனர். 

ஆர்ப்பாட்டத்தில் வேலூர் மாநகராட்சி கவுன்சிலர் பாபி கதிரவன் காட்பாடி ஒன்றிய செயலாளர் பாண்டியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News