உள்ளூர் செய்திகள்
இளவட்டக்கல் தூக்கி அசத்திய வாலிபர்கள்
நெல்லை மாவட்டம் பணகுடி அருகே வடலிவிளை கிராமத்தில் பாரம்பரியமிக்க இளவட்டக்கல் தூக்கும் போட்டி நேற்று மாலை நடைபெற்றது.
நெல்லை:
நெல்லை மாவட்டம் பணகுடி அருகே வடலிவிளை கிராமத்தில் பாரம்பரியமிக்க இளவட்டக்கல் தூக்கும் போட்டி நேற்று மாலை நடைபெற்றது. இதில் திரளான வாலிபர்கள் கலந்து கொண்டு இளவட்டக்கல் தூக்கி அசத்தினர்.
இளவட்டக்கல் தூக்கிய வாலிபர்களையும், ஒற்றை கையால் உரலை தூக்கிய இளைஞரையும், ஆண்களுக்கு சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபிக்கும் வகையில் இளவட்டக்கல்லை தூக்கிய பெண்ணையும் படத்தில் காணலாம்.