ஆன்மிகம்
திருவையாறில் நந்திகேஸ்வரர் பிறப்பு விழா
திருவையாறு அந்தணர்குறிச்சியில் நந்தியம்பெருமான் பிறப்பு விழா நடைபெற்றது. விழாவில் நந்தியம்பெருமானுக்கு சந்தனம், மஞ்சள், தயிர், தேன், பால், இளநீர் ஆகிய திரவியங்களைகொண்டு சிறப்பு அபிஷேகங்கள் தீபாராதனை நடைபெற்றது.
திருவையாறு அந்தணர்குறிச்சியில் நந்தியம்பெருமான் பிறப்பு விழா நடைபெற்றது. விழாவில் நந்தியம்பெருமானுக்கு சந்தனம், மஞ்சள், தயிர், தேன், பால், இளநீர் ஆகிய திரவியங்களைகொண்டு சிறப்பு அபிஷேகங்கள் தீபாராதனை நடைபெற்றது. விழாவில் கோவில் நிர்வாகிகள், பணியாளர்கள், பக்தர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு நந்தியம்பெருமானை வழிப்பட்டனர். நந்தியம்பெருமாளுக்கு ஐயாறப்பர் அறம்வளர்த்த நாயகியுடன் காட்சி அளித்தார். மாலை ஐயாறப்பர் கோவிலில் நந்தியம்பெருமானுக்கு பட்டாபிஷேகம் நடைபெற்றது.
விழா ஏற்பாடுகளை தருமபுர ஆதீனம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகள் உத்தரவின்பேரில் தர்மபுரம் ஆதீன கட்டளை விசாரணை சொக்கலிங்க தம்பிரான் சுவாமிகள் மற்றும் கோவில் நிர்வாகிகள் செய்து உள்ளனர்.
விழா ஏற்பாடுகளை தருமபுர ஆதீனம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகள் உத்தரவின்பேரில் தர்மபுரம் ஆதீன கட்டளை விசாரணை சொக்கலிங்க தம்பிரான் சுவாமிகள் மற்றும் கோவில் நிர்வாகிகள் செய்து உள்ளனர்.