செய்திகள்
மரணம்

பழவேற்காட்டில் மீன் பிடிக்கும் போது ஏரியில் மூழ்கி மீனவர் பலி

Published On 2021-01-13 13:05 GMT   |   Update On 2021-01-13 13:05 GMT
பழவேற்காட்டில் மீன் பிடிக்கும் போது ஏரியில் மூழ்கி மீனவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொன்னேரி:

பொன்னேரி அருகே அவுரிவாக்கம் ஊராட்சியில் அடங்கியது கீழ்குப்பம் மீனவ கிராமம். இங்கு வசிப்பவர் சிகாமணி (வயது 54). அவரது சகோதரர் சீராளன் (48). இவரது மருமகன் ராஜேஷ் (34).

இவர்கள் 3 பேரும் பழவேற்காடு ஏரியை ஒட்டி முகத்துவாரம் பகுதியில் நேற்று மாலை மீன்பிடித்து கொண்டிருந்தனர்.

வலையை சரி செய்ய சிகாமணி ஏரியில் இறங்கினார். அப்போது வலையில் சிக்கிய அவர் ஏரியில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்த திருப்பாலைவனம் சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து இன்ஸ்பெக்டர் மகிதா அண்ணாகிருஷ்டி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
Tags:    

Similar News