செய்திகள்
சோனியாவுடன் ஆலோசனை செய்த மாநில முதல்வர்கள்

நீட், ஜேஇஇ தேர்வுகளை ஒத்திவைக்க கோரி சுப்ரீம் கோர்ட்டை நாட 7 மாநில முதல்வர்கள் முடிவு

Published On 2020-08-26 14:04 GMT   |   Update On 2020-08-26 14:04 GMT
நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகளை ஒத்திவைக்கக் கோரி சுப்ரீம் கோர்ட்டை நாட 7 மாநில முதல் மந்திரிகள் முடிவு செய்துள்ளனர்.
புதுடெல்லி:

நீட் மற்றும் ஜே.இ.இ தேர்வுகளை செப்டம்பர் முதல் வாரத்தில் நடத்த மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு இந்த தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். பல்வேறு மாநில அரசுகளும், அரசியல் கட்சிகளும் இந்தாண்டு தேர்வு நடத்துவதற்கு ஆட்சேபம் தெரிவித்து வருகின்றன.

இதற்கிடையே, காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி நீட், ஜேஇஇ தேர்வுகளை ஒத்திவைப்பது குறித்து பா.ஜ.க. ஆளாத 7 மாநில முதல் மந்திரிகளுடன் ஆலோசனை நடத்தினார். வீடியோ கான்பரன்ஸ் மூலம் பிற்பகலில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மகாராஷ்டிரா, மேற்கு வங்காளம், ஜார்க்கண்ட், பஞ்சாப் உள்ளிட்ட முதல் மந்திரிகள் பங்கேற்றனர்.

கூட்டத்தின் முடிவில் நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகளை ஒத்திவைக்கக் கோரி சுப்ரீம் கோர்ட்டை நாட 7 மாநில முதல் மந்திரிகளும் முடிவு செய்துள்ளனர்.
Tags:    

Similar News