உள்ளூர் செய்திகள்
பள்ளி மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை
திருமங்கலம் அருகே பள்ளி மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டான்.
திருமங்கலம்
மதுரை மாவட்டம் பேரையூர் காளியம்மன் கோவில் தெருவைச்சேர்ந்தவர் மணிகண்டன், லோடுமேன். இவருக்கு 2 மகன்கள் உள்ளனர்.
மூத்த மகன் வசந்தகுமார். தனியார் கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வருகிறார். இளைய மகன் யோகநாத் (17). பேரையூர் அருகே உள்ள எஸ்.மேலப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்2 படித்து வந்தார். இவருக்கு வயிற்று வலி இருந்தது.
நேற்று வழக்கம்போல் வயிற்று வலிக்கு மாத்திரை சாப்பிட்டு விட்டு தூங்கச் சென்றார். மாலையில் எழுப்பச் சென்றபோது கதவு உள்பக்கமாக பூட்டி இருந்தது. அக்கம் பக்கத்தினர் கதவை உடைத்து பார்த்தபோது யோகநாத் சேலையில் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தார். உடனடியாக அவரை கீழே இறக்கி பேரையூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். டாக்டர் பரிசோதனை செய்ததில் யோகநாத் இறந்து விட்டதாக தெரிவித்தார்.
இதுகுறித்து தந்தை மணிகண்டன் கொடுத்த புகாரின்பேரில் பேரையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.