செய்திகள்
உருக்குலைந்து கிடக்கும் கார்

டிவைடரை தாண்டி வந்து வாடகை கார் மீது மோதிய சொகுசு வாகனம்- 3 பேர் பலி

Published On 2021-11-19 05:07 GMT   |   Update On 2021-11-19 05:07 GMT
விமான நிலைய சாலையில் சொகுசு வாகனம் மோதியதால் வாடகை காரின் முன்பகுதி கடுமையாக சிதைந்து உருக்குலைந்தது.
பெங்களூரு:

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் சொகுசு காரும், வாடகைக் காரும் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். விமான நிலைய பகுதியில் இருந்து அதிவேகமாக வந்த சொகுசு கார், வித்யாநகர் கிராஸ் ரோட்டில் வந்தபோது, கட்டுப்பாட்டை இழந்து டிவைடரை தாண்டி எதிர்புறம் வந்த வாடகை கார் மீது பயங்கரமாக மோதியது. 

வாடகை காரின் முன்பகுதி கடுமையாக சிதைந்து உருக்குலைந்தது. காரில் இருந்த பெண் உள்ளிட்ட 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சொகுசு காரில் இருந்த 2 பேர் பலத்த காயமடைந்தனர். அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
Tags:    

Similar News