செய்திகள்
காதல் திருமணம் செய்த பெண் விஷம் குடித்து தற்கொலை
திருப்பூரில் காதல் திருமணம் செய்த பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பூர்:
திருப்பூர் ராயபுரம் வள்ளுவர் காலனியை சேர்ந்தவர் ராஜா(32) பனியன் நிறுவனத்தில் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார் இவரும் சங்கீதா(24) என்ற பெண்ணும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். சம்பவத்தன்று இரவு ராஜா வேலைக்கு சென்று விட்டார்.
தனியாக இருந்த சங்கீதா திடீரென வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து குடித்து மயங்கி கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த சங்கீதா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து திருப்பூர் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் திருமணமாகி 5 ஆண்டுகளே ஆவதால் ஆர்.டி.ஓ விசாரணையும் நடைபெற்று வருகிறது.
திருப்பூர் ராயபுரம் வள்ளுவர் காலனியை சேர்ந்தவர் ராஜா(32) பனியன் நிறுவனத்தில் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார் இவரும் சங்கீதா(24) என்ற பெண்ணும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். சம்பவத்தன்று இரவு ராஜா வேலைக்கு சென்று விட்டார்.
தனியாக இருந்த சங்கீதா திடீரென வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து குடித்து மயங்கி கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த சங்கீதா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து திருப்பூர் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் திருமணமாகி 5 ஆண்டுகளே ஆவதால் ஆர்.டி.ஓ விசாரணையும் நடைபெற்று வருகிறது.