உள்ளூர் செய்திகள்
பாதயாத்திரையாக செல்லும் கார்த்திக்கேயன்.

கொரோனா நீங்க வேண்டி சபரிமலைக்கு அய்யப்ப பக்தர் பாதயாத்திரை

Published On 2022-01-08 09:18 GMT   |   Update On 2022-01-08 09:18 GMT
அய்யப்ப பக்தரான கார்த்திக்கேயன் தனி நபராக 10 ஆண்டுகளாக சபரிமலைக்கு பாதயாத்திரை சென்று வருகிறார்.
அவினாசி:

திருப்பூர் மாவட்டம் அவிநாசியை சேர்ந்தவர் கார்த்திகேயன், (வயது 58). ஒர்க் ஷாப் நடத்தி வருகிறார். அய்யப்ப பக்தரான இவர் தனி நபராக 10 ஆண்டுகளாக சபரிமலைக்கு பாதயாத்திரை சென்று வருகிறார்.

இந்தநிலையில் கொரோனா தொற்று உலகில் இருந்து முழுமையாக நீங்க வேண்டுமென வேண்டி இம்முறை பாதயாத்திரை சென்று கொண்டிருக்கிறார். அவர் கூறுகையில், அவிநாசியில் இருந்து இருமுடியுடன், தனிநபராக நடந்தே சென்று கொண்டிருக்கிறேன். 

சரியாக 22வது நாளில் சபரிமலை சென்று சேர்ந்து, இருமுடியை செலுத்தி, அய்யப்ப சுவாமியை வழிபட்டு திரும்புவேன். கொரோனா பாதிப்பு முழுமையாக நீங்க வேண்டி பாதயாத்திரை மேற்கொண்டுள்ளேன் என்றார்.
Tags:    

Similar News