செய்திகள்
பால்

புயல் எச்சரிக்கை எதிரொலி- ஆவின் பால் தங்கு தடையின்றி கிடைக்க ஏற்பாடு

Published On 2020-12-03 05:10 GMT   |   Update On 2020-12-03 05:10 GMT
குமரி மாவட்டத்தில் புயல் எச்சரிக்கை விடப்பட்டதை அடுத்து பொதுமக்களுக்கு ஆவின் பால் தங்கு தடையின்றி கிடைக்க உரிய முன்னேற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பால்வளத்தலைவர் அசோகன் தெரிவித்தார்.
நாகர்கோவில்:

குமரி மாவட்ட பால்வள தலைவர் எஸ்.ஏ.அசோகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

குமரி மாவட்டத்தில் புயல் எச்சரிக்கை விடப்பட்டதை அடுத்து பொதுமக்களுக்கு ஆவின் பால் தங்கு தடையின்றி கிடைக்க உரிய முன்னேற்பாடு செய்யப்பட்டுள்ளது. கூட்டுறவு சங்கங்களில் தடையின்றி பால் கொள்முதல் செய்யவும், பொதுமக்களுக்கு ஆவின்பால் மற்றும் பால் உபபொருட்கள் தடையின்றி கிடைக்கவும் குழு அமைக்கப்பட்டு அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. மேலும் கால்நடைகளுக்கு அவசர சிகிச்சைகள் மேற்கொள்ள ஏதுவாக கால்நடை மருத்துவர் குழுவும், மருந்துகளும் தயார் நிலையில் உள்ளது. தேவையான அளவு மாட்டுத்தீவனம் இருப்பில் வைக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் பால் பெறுவதில் ஏதேனும் சிரமங்கள் ஏற்பட்டால் ஆவின் அலுவலகத்தை 04652-224037, 94424 01963 என்ற எண்களில் தொடர்பு கொள்ளவும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News