செய்திகள்
மின்தடை

குன்னூரில் நாளை மின்சாரம் நிறுத்தம்

Published On 2020-10-16 12:11 GMT   |   Update On 2020-10-16 12:11 GMT
நீலகிரி மாவட்டம் ஜெகதளா துணை மின்நிலையத்தில் புதிய மின் மாற்றி அமைக்கும் பணி நடைபெற உள்ளதால் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது.
ஊட்டி:

நீலகிரி மாவட்டம் ஜெகதளா துணை மின்நிலையத்தில் புதிய மின் மாற்றி அமைக்கும் பணி நடைபெற உள்ளது. இதனால் மின் வினியோகம் நிறுத்தி வைக்கப்படுகிறது. அங்கிருந்து மின்வினியோகம் பெறும் அருவங்காடு, குன்னூர், பர்லியார், வண்டிசோலை, சின்க்காரா, வெலிங்டன், புரூக்லேண்ட், ஆடர்லி, பெட்போர்டு, ஓட்டுப்பட்டரை, கரன்சி, பேரட்டி, சிம்ஸ்பார்க், இளித்தொரை, ஓசஹட்டி, உபதலை, எடப்பள்ளி, மவுண்ட் பிளசண்ட் ஆகிய இடங்களில் நாளை (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் இருக்காது. 

இந்த தகவலை நீலகிரி மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் (பொறுப்பு) சேகர் தெரிவித்து உள்ளார்.
Tags:    

Similar News