செய்திகள்
உடுமலை ரேஷன் கடைகளில் தரமற்ற அரிசி விநியோகம் - பொதுமக்கள் புகார்
தரமற்ற அரிசியை பயன்படுத்த முடியாமல் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
உடுமலை:
தமிழ்நாடு அரசு பொது விநியோகத்துறை மூலம் பொதுமக்களுக்கு மாதந்தோறும் ரேஷன் அரிசி, பருப்பு, கோதுமை ,எண்ணெய் (பாமாயில்), சர்க்கரை போன்ற பொருட்கள் வழங்கப்படுகிறது.
இந்தநிலையில் கடந்த 2 மாதங்களாக உடுமலை பகுதியில் உள்ள நியாய விலைக் கடைகளில் கருப்புநிற பழுப்பு அரிசி கலந்து பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்படுகிறது.
இதை பயன்படுத்த முடியாமல் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தரமான அரிசி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.