செய்திகள்
கைது

பாம்பன் அருகே ரூ.20 லட்சம் கடல் அட்டைகள் பறிமுதல்-2 பேர் கைது

Published On 2019-09-24 07:08 GMT   |   Update On 2019-09-24 07:08 GMT
பாம்பன் அருகே காரில் கடத்திய ரூ.20 லட்சம் மதிப்பிலான கடல் அட்டைகளை கடலோர காவல்படையினர் பறிமுதல் செய்தனர்.

ராமநாதபுரம்:

ராமேசுவரத்தில் இருந்து வேதாளை நோக்கி சென்ற காரில், இலங்கைக்கு கடத்துவதற்காக கடல் அட்டைகள் கொண்டு செல்லப்படுவதாக கடலோர காவல்படைக்கும், போலீசாருக்கும் தகவல் கிடைத்தது. அதன் பேரில் அவர்கள் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டனர்.

பாம்பன் சுங்கச்சாவடி அருகே தலைமை காவலர்கள் குமார், சரவணன், யாசுதீன் ஆகியோர் சோதனை பணியில் இருந்தனர். அங்கு வேகமாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தபோது, அதில் 7 மூடைகளில் கடல் அட்டைகள் இருப்பது தெரியவந்தது.

அந்த மூடைகளில் இருந்த 350 கிலோ கடல் அட்டைகளின் மதிப்பு ரூ.20 லட்சம் ஆகும். அவை காருடன் பறிமுதல் செய்யப்பட்டது. காரில் வந்த 2 பேரும் கைது செய்யப்பட்டனர்.

விசாரணையில், அவர்கள் ராமேசுவரத்தைச் சேர்ந்த சத்தியமூர்த்தி (வயது 33), மாரியப்பன் (32) என தெரியவந்தது.

Tags:    

Similar News